tamilni 21 scaled
இலங்கைசெய்திகள்

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

அதன்படி லபுகமவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கிங் கங்கை மற்றும் நில்வல கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல ஆறு நிரம்பி வழிவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்திலும் அடை மழை காரணமாக ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...