1 50
இலங்கைசெய்திகள்

யோஷிதவின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு! கசிந்த அநுர தரப்பின் உள்ளகத் தகவல்கள்

Share

யோஷிதவின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு! கசிந்த அநுர தரப்பின் உள்ளகத் தகவல்கள்

இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர(Aruna Jayasekara) தெரிவித்துள்ளார்.

மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யோஷிதவை(Yositha Rajapaksa) கைது செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் பேசப்பட்டதாகவும் இந்த விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோஷிதவை கைது செய்வது போதுமானதல்ல என தற்பொழுது விமர்சனங்கள் வெளியிடப்படும் மற்றுமொருவரை கைது செய்யுமாறு கோரப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் எவரைக் கைது செய்வது என்றாலும் சரியான சட்ட விதிகள் பின்பற்றி கைது செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்று நடந்து கொள்ள முடியாது சரியான முறையில் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாத காலத்தில் எம்மால் இவர்களை கைது செய்ய முடியாவிட்டாலும் இதனை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விடவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல மடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும் என அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...