14 24
இலங்கைசெய்திகள்

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

Share

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை குறைப்பதாக கொள்கைப் பிரகடனத்தில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் கட்சி கொள்கை பிரகடனத்தில் தெளிவான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சம்பளங்களை குறைக்குமாறு தம்மால் கோர முடியாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் தமது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர் எனவும் அவர்கள் சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சி தமக்கு போதுமானளவு கொடுப்பனவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...