இலங்கைசெய்திகள்

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

Share
14 24
Share

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை குறைப்பதாக கொள்கைப் பிரகடனத்தில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் கட்சி கொள்கை பிரகடனத்தில் தெளிவான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சம்பளங்களை குறைக்குமாறு தம்மால் கோர முடியாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் தமது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர் எனவும் அவர்கள் சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சி தமக்கு போதுமானளவு கொடுப்பனவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...