13 16
இலங்கைசெய்திகள்

கட்சி பேதமின்றி ரணிலுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் : பவித்ரா வன்னியாராச்சி

Share

கட்சி பேதமின்றி ரணிலுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் : பவித்ரா வன்னியாராச்சி

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்தார்.

அநுராதபுரம், சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியதில்லை.

ஆனால், இம்முறை கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம். மக்கள் குறித்தும், நாடு குறித்தும் சிந்திக்கும் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தத் தீர்மானித்துவிட்டனர்.

நாடு மிகவும் பாதாளத்தில் வீழ்ந்தது. பல மைல் தூரம் காஸ் வரிசை இருந்தது. பல மைல் தூரம் எரிபொருள் வரிசை இருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பஞ்சம் வரும் என்றும் மக்கள் அஞ்சினார்கள்.

இருந்த ஜனாதிபதி தப்பியோடினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒளிந்துகொண்டார். நாடு நிர்க்கதிக்குள்ளானது. ‘அரகலய’ போராட்டத்துக்குச் சென்றபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விரட்டி விரட்டி அடித்ததைப் போல் மீண்டும் விரட்டியடித்து விடுவர் என்ற அச்சத்திலேயே அவர் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...

02 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் QR முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு: முறைகேடுகளில் ஈடுபட்ட 153 பேருக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீள அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு (National Fuel Pass) முறைமையில்...

1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை...

20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...