tamilni 319 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

Share

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

நாட்டின் முக்கியமான தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் தாம் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் சீரமைப்பு குறித்து ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தாலும், அரசாங்கம் உண்மையிலேயே அந்த கட்சியின் கீழ் செயற்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் ஊடகம் ஒன்றுடன் கலந்துரையாடலை நடத்திய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே தமது கட்சி அலுவலகத்திற்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைச்சர்களில் முதன்மையாக இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டத் தலைவர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அவரது கட்சியே நாடாளுமன்ற தேர்தலின் மூலமும் ஆட்சியைப் பிடிக்கும்.

எனவே அதற்குப் பதிலாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சுயாதீனமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி பதவியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...