”வாகனத்தின் பிரேக் எங்களிடமே இருக்கிறது” – ஜே.வி.பி

7b78dc0381136f79ecc6f66106be9194 XL

” எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்.”- என்று ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார்.

” ‘பிரேக்’ இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி அமையுமென தெரியவில்லை. நாட்டை கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டனர்.

தற்போது நாம் மக்களை நேரில் சந்திக்கின்றோம். ஆட்சியை பொறுப்பேற்குமாறு அவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதுவரை காலமும் பலமான எதிர்க்கட்சிக்கான ஆணையை வழங்குமாறே நாம் மக்களிடம் கோரினோம். தற்போது ஆட்சி அதிகாரத்தை கோருகின்றோம்.

நாட்டை ஐந்தாண்டுகளுக்கு எங்களிடம் தாருங்கள், சிறப்பாக செய்து காட்டுகின்றோம்.” என்றும் லால்காந்தா குறிப்பிட்டார்.

#SrilankaNews

Exit mobile version