1 43
இலங்கைசெய்திகள்

இரண்டு வருடங்களில் சாதித்துக் காட்டினோம்: ஜனாதிபதி ரணில் பெருமிதம்

Share

இரண்டு வருடங்களில் சாதித்துக் காட்டினோம்: ஜனாதிபதி ரணில் பெருமிதம்

“இரண்டு வருடங்களில் எந்த அரசும் செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். அதுவே நாட்டின் முன்னேற்றம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று முற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மேடையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கமும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், “இந்த மேடையில் எனக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் ஆசிரியர் இருக்கின்றார்.

13 – 14 வயதில் அவரிடம் கல்வி கற்றேன். 1961 ஆம் ஆண்டுகளில் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரிடம் கற்றிருக்கின்றோம்.

எனவே, நாட்டை மீட்டெடுத்த பெருமையை அவருக்கும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்கிரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.

எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தமை நினைவிருக்கின்றது.

அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால்தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.” என்றார்.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...