25 684a8da019cfb 1
இலங்கைசெய்திகள்

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள்: பாதிக்கப்படும் மக்கள்!

Share

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசு கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஆதவன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12) நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த பகுதியானது வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருந்தாலும் சங்கானை, அராலி போன்ற பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த சூழலை அண்டியுள்ள மக்களின் சுவாசத்துக்கு அது பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவருமான சிறீ பவானந்தராஜா பதிலளிக்கையில், மாநகர சபையினர் தான் இந்த வேலைகளை செய்கின்றனர். கழிவகற்றல் என்பது ஒரு பாரிய பிரச்சினையாகத் தான் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...