tamilni 13 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை பொறுத்த வரையில் அதிகமானோர் கார் அல்லது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லூப்ரிகண்டுகள் அல்லது கிரீஸ் வகைகள் குறித்து நுகர்வோருக்கு தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பான அரச அறிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. “தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றது.

மேலும், கிரீஸ் கலந்த மாவு உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இவை குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற பல பிரச்சினைகளை நுகர்வோர் உணர்ந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...