இலங்கைசெய்திகள்

அடக்குமுறைகளை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்றமுடியாது: அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Share
24 668bca0b7ff58
Share

அடக்குமுறைகளை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்றமுடியாது: அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போதைய 18% VAT வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் என திறைசேரியின் செயலாளர் நாயகம் மகிந்த சிறீவர்தன தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகளை மேற்கொண்டு அவ்வாறான கோரிக்கையை நிறைவேற்றமுடியாது எனவும் கூறியுள்ளார்.

அரச தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது திறைசேரி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினால், தற்போதுள்ள செலவினங்களுக்கு மேலதிகமாக வருடாந்தம் மேலும் 140 பில்லியன் ரூபாவும், சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என திறைசேரி நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருமானத்தைக் கண்டறிய, தற்போதுள்ள வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க, VAT வரி 2% அதிகரிக்க வேண்டும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...