24 6742f22534518
இலங்கைசெய்திகள்

பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..

Share

பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..

தொடர்ந்து வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் போலியான அல்லது மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கும் அதிக கேள்வி நிலவும் என்பதால் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

மேலும், இவ்வாறான மோசடி நடவடிக்கைககள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாக தெரியப்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...