5 1
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையிலுள்ள (Sri lanka) கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ (GG Samal Sanjeeva) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது, ​​நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் இந்த நிலைமை அதிகளவில் எட்டியுள்ளதாகவும் வைத்தியர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட விடயங்களை கவனத்தில்கொண்டு தாய் மற்றும் சேய் ஊட்டச் சத்துத் திட்டங்களை கிராம மட்டத்திலிருந்து நடைமுறைப்படுத்த அதிகாரிகள் உழைக்க வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...