24 661a005fcca31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

Share

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முன்னைய நிதியை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரிகளை உயர்த்தியுள்ளதுடன் சில மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் மீட்புக் கடனை இலங்கை பெற்றுள்ளது.

ஆனால், அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிக்கன நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடும்.

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது வாய்ப்புகளையும் பாதிக்கலாம் என்றும் ஆசிய வங்கி எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...