tamilni 477 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Share

இலங்கையிலுள்ள பல மாவட்டங்களில் இன்றைய தினம் (22.02.2024) இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என்பதால் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரை பருகுமாறும், வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீட்டர் நீரையும், சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரையும் குடிப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

வேலைக்குச் செல்வோர் அதிக தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமானது என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...