29 10
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த டிப்போக்களின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு இடத்தில் திடீர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.

அதன் பின்னர், குறித்த தரப்பினர் தாங்கள் வந்த வாகனத்தை சீர் செய்ய Ez cash மூலம் அவசர தொகையாக 10,000 ரூபாயை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு வந்துள்ளதாகவும், சில இடங்களில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர்கள் வாகனம் திருத்துமிட உரிமையாளர்கள் அல்லது குறித்த இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வேறு சில குறிப்பிட்ட நபர்களாக இருந்து திட்டமிட்டு, இந்த பண மோசடிகளை செய்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தொலைபேசி எண்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, பல சந்தர்ப்பங்களில் அந்த எண்கள் இறந்த நபர்கள் அல்லது வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சிம் அட்டை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது சில போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்தால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மக்களைத் தொடர்பு கொண்டு, அழைப்பின் உண்மை மற்றும் பொய்யை சரிபார்த்துக் கொள்ளுமாறும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...