24 662ae06a2306d
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Share

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக மேற்கூறப்பட்ட இவர்கள் அனைவரும் வட்டியுடன் கூடிய 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பணத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டும் பாவிக்க கூடிய சத்திரசிகிச்சை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர் கலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டதன் காரணமாக, தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், இதன் விளைவாக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தினசரி மின்வெட்டு என்பன வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...