24 662ae06a2306d
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Share

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக மேற்கூறப்பட்ட இவர்கள் அனைவரும் வட்டியுடன் கூடிய 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பணத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டும் பாவிக்க கூடிய சத்திரசிகிச்சை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர் கலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டதன் காரணமாக, தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், இதன் விளைவாக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தினசரி மின்வெட்டு என்பன வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...