24 6604d38b1c272
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Share

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோல் நோய்களுக்கான மருந்தாக விசேட வைத்தியர்களால் மாத்திரம் பரிந்துரைக்கப்படும் மருந்து வகையொன்று கொழும்பில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த க்ரீமை கொள்வனவு செய்யும் சிலர் சாதாரண க்ரீம்களுடன் கலந்து சருமத்தை பளபளக்கும் மருந்தாக விற்பனை செய்வதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிது காலத்திற்குள் சருமம் வெள்ளையாகிவிடும் என்ற கருத்து நிலவுவதால், மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கமைய, இந்த மருந்தை கண்டுபிடிப்பதற்காக மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் புறக்கோட்டை பகுதிக்கு சென்றனர்.

வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் விற்கப்படும் இடங்களில் மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்பதும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரைப்படி மிகக் குறைந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருந்துப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, மருந்துகள் அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...