20 7
இலங்கைசெய்திகள்

யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட சந்தேக நபர் கைது

Share

யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தின்(Jaffna) பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டு என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி காவல்துறை பிரிவுகளில் கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த நிலையில் இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று முன்தினம் (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடியதுடன் சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பிரதான சந்தேக நபரை இன்று(07) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...