tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

Share

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்யமுடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே இதனை கூறியுள்ளார்.

உலகளவில் சிறு பிரிவினராகயிருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யூதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிகழ்வில் அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு வர்த்தக பிரிவு வகுப்பறைனை திறந்துவைத்தார்.

மேலும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மக்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம என்பனவும் இடம்பெற்றது.

இதன்போது அன்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...