child on
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Share

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் மகேஷக விஜேவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில், குழந்தைகளே இந்தக் காய்ச்சல் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மழைக்காலத்திலும் ஆண்டின் இறுதியிலும் இந்தத் தொற்றுநோய் நிலைமை மிகவும் அதிகமாகக் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் பாடசாலைகளில் உள்ள குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியர் விஜேவர்தன மேலும் கூறுகையில், இந்த நோய் பல வடிவங்களில் ஏற்படலாம் .திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். சில குழந்தைகள் சளி, காது தொற்று, சைனசிடிஸ் அல்லது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.

இவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இது சில சமயங்களில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும். மேலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாசச் சிக்கல்களுக்கு உள்ளாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஏற்படும் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...