2 43
இலங்கைசெய்திகள்

புதுக்கடை துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு

Share

புதுக்கடை துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு

புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பிரபுக்கள் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி முதல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையிலும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது.

பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் காலத்திற்கு காலம் மீளாய்வு செய்வதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் பிரபுக்களுக்கு பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கை குறித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு இன்றி பயணங்களை மேற்கொள்வதாகவும், அவர்கள் பொலிஸ் பாதுகாப்பினை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பலர் தற்பொழுது சாதாரண சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...