13 23
இலங்கைசெய்திகள்

விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Share

விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மோசடி வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபை மேம்படுத்தல் பணிகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையினால் 64 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக, லொத்தர் சபையின் அப்போதைய தலைவர் சந்தரவன்ச பத்திராஜவிற்கு எதிராக ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது இந்த மனுவின் முறைப்பாட்டாளரான விஜித ஹேரத் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருந்தார்.

இன்றைய தினம் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ள காரணத்தினால் தமது கட்சிக்காரர் வேறொரு நாளில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு விஜிதவின் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச கோரி இருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...