tamilni 127 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறை

Share

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறை

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் உளவியல் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

தரம் ஆறு முதல் அதற்கு மேற்பட்ட தரங்களில் கற்கும் மாணவர்கள் மத்தியில் இவ்வாறு மோதல்கள் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் காண்பிக்கப்படும் வன்முறைகள், சண்டைகள், துப்பாக்கிச்சூடுகள், பழிவாங்குதல்கள் உள்ளிட்ட காட்சிகளை பார்வையிடுதல் மற்றும் வீடியோ கேம்கள் மூலமாக மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது தரம் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கற்கும் மாணவர்கள் பெற்றோரின் சொல்லை கேட்பதில்லை எனவும், மிகவும் கோபமாக நடந்து கொள்வதாகவும் அவர்களிடம் அலைபேசிகளை வழங்க வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வன்முறைக் காட்சிகளை பார்வையிடுவதன் மூலமும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் தொடர்பில் பெற்றொர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென டொக்டர் ரூமி ரூபன் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...