மக்களை அச்சுறுத்தும் வெப்பம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

24 66230c0988213

மக்களை அச்சுறுத்தும் வெப்பம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் இன்றையதினம் 7 மாகாணங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, கிழக்கு, தெற்கு, வடமேல் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ‘எச்சரிக்கை’ அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வெயிலில் தொடர்ச்சியான செயல்பாடு வெப்ப பக்கவாதம்,வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு என்பவற்றை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Exit mobile version