rtjy 64 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் ஆய்வில் தகவல்

Share

இலங்கை தொடர்பில் ஆய்வில் தகவல்

இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு ஜூன் 2023 இல் 21% இலிருந்து அக்டோபர் 2023 இல் 9 வீதமாக குறைந்துள்ளதாக வெரிடே ஆய்வின் தேசத்தின் மனநிலை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு, 2023 ஜூனில் 12 வீதமா இருந்த நிலையில், அக்டோபரில் அது 6 வீதமாகக் குறைந்து, தேசத்தின் ஒட்டுமொத்த திருப்தியில் கணிசமான சரிவைக்காட்டுகிறது.

அத்துடன் பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 இலிருந்து அக்டோபரில் எதிர்மறை (-) 62 ஆக குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.

வெரிடே ஆய்வின் மூட் ஒஃப் தி நேசன், கருத்துக் கணிப்பு வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது, அது நாடு முழுவதும், தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பதில்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அரசாங்க ஒப்புதல் என்ற ஆய்வின்போது தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது ஏற்கவில்லையா? என்ற கேள்விக்கு, 9 வீதமானோர் ஒப்புதல் அளித்துள்ளனர். 7 வீதமானோர் தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இலங்கை திருப்தி: என்ற ஆய்வின்போது பொதுவாக, இலங்கையில் நடக்கும் செயற்பாடுகளில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா? என்ற கேள்விக்கு, 6 வீதமர்னோர் மட்டுமே திருப்தியடைவதாகக் கூறியுள்ளனர்.

பொருளாதார நம்பிக்கை என்ற ஆய்வில், ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 ஆக இருந்த மதிப்பெண் அக்டோபரில் எதிர்மறை (-) 62 ஆக வீழ்ச்சியடைந்ததால், பொருளாதார நம்பிக்கை மோசமடைந்தது.

இந்தநிலையில் அரசாங்கம், நாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான பொது ஒப்புதல், திருப்தி மற்றும் நம்பிக்கையை மதிப்பிடுவதை ‘தேசத்தின் மனநிலை’ கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெரிடே ரிசர்ச் என்ற ஆய்வு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...