2 37 scaled
இலங்கை

தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

Share

தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் (Palani Digambaram) மற்றும் வேலுகுமார் (Velukumar) ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ள நிலையில், வேலுகுமாரைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் “பார் குமார்” என்று கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...

01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...