2 37 scaled
இலங்கை

தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

Share

தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் (Palani Digambaram) மற்றும் வேலுகுமார் (Velukumar) ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ள நிலையில், வேலுகுமாரைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் “பார் குமார்” என்று கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...

Sarath Weerasekera
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் புலிகளுக்கு அஞ்சிச் செயல்படுகிறது – சுதந்திர தின விழா குறித்து சரத் வீரசேகர காட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் இராணுவ அணிவகுப்புகள் மற்றும் வர்ணனைகள் கையாளப்பட்ட விதம்...

1689990497 1689990167 Ranil Wikramasingha L
செய்திகள்அரசியல்இலங்கை

ஜென் ஸீ தலைமுறையிடம் அரசியலை ஒப்படைப்போம்: ரணில் விக்கிரமசிங்கவின் SMART UNP பிரகடனம்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்தை நோக்கி...