இராணுவ தலைமையகத்திற்கு அதிநவீன வாகனங்கள்
சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் இராணுவ தலைமையக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று (22.08.2023) பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஓய்வு பெற்ற கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.