1 3
இலங்கைசெய்திகள்

வாகனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மாற்றம்

Share

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதன் பின் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், கணிசமான விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக பிரதான வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன இறக்குமதி துவங்கியவுடன் அதிக தேவை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவ்வாறான தேவை உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், இறக்குமதியாளர்கள் அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இறக்குமதியாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும், சில சமயங்களில் இறக்குமதி உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். எனவே, வாங்குபவர் முன்பதிவு செய்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்குவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், வாங்குபவர் வாகனத்தை முன்பதிவு செய்த பின் வாகனத்தை விநியோகம் செய்ய சுமார் ஐந்து மாதங்கள் ஆகும். எனினும் புதிய வாகனங்களின் விலை உயர்வால், வாகனங்கள் வாங்குவதையோ, பயன்படுத்திய வாகனத்தை வாங்குவதையோ மக்கள் கைவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...