இலங்கைசெய்திகள்

ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிதியமைச்சின் முக்கிய தீர்மானம்

15 17
Share

ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிதியமைச்சின் முக்கிய தீர்மானம்

வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்படும் போது முதல் கட்டமாக பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அனுமதி நிதி அமைச்சினால் வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே(Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் இந்த நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும்.

மேலும் அந்நிய செலாவணியையும் சேமிக்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டினார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...