24 66306a0f2d765
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தமது கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல அமைச்சர்கள் தொடர்ந்தும் 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக சபாநாயகர் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...