24 661deaca7be50
இலங்கைசெய்திகள்

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Share

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியினால் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரூபாயின் பெறுமதி ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இதனை கொண்டு உடனடியாக வாகன இறக்குமதி செய்ய செல்வது தவறான செயலாகும்.

அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டிற்கு தேவையான வாகன இறக்குமதிகள் செய்தால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...