24 661deaca7be50
இலங்கைசெய்திகள்

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Share

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியினால் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரூபாயின் பெறுமதி ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இதனை கொண்டு உடனடியாக வாகன இறக்குமதி செய்ய செல்வது தவறான செயலாகும்.

அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டிற்கு தேவையான வாகன இறக்குமதிகள் செய்தால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...