24 665a6dc0eb7b0
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

Share

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது முக்கியம் என மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பகமான அடிப்படையில் அன்னிய கையிருப்பு இருப்பதாக கூறிய அவர், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது அரசு எடுக்க வேண்டிய தீர்மானம் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்ட முறையில் வாகன இறக்குமதியை தளர்த்தியுள்ளதாகவும் அதற்கமைவாக சுற்றுலா வர்த்தகத்திற்காக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதும் முக்கியம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் தேவையான அன்னிய செலாவணியை நிர்வகிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....