20 4
இலங்கைசெய்திகள்

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

Share

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குமுறைகள் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் அனுமதிப்பத்திரத்திற்கான வாகனங்கள் நிச்சயமாக வழங்கப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டிலேயே அரச ஊழியர்கள் மிகவும் ஆதரவற்ற குழுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளை வீதியில் அடித்துக் கொல்லும் யுகத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு இந்நாட்டு மக்கள் நன்றி காட்டுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...