இலங்கைசெய்திகள்

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

Share
20 4
Share

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குமுறைகள் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் அனுமதிப்பத்திரத்திற்கான வாகனங்கள் நிச்சயமாக வழங்கப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டிலேயே அரச ஊழியர்கள் மிகவும் ஆதரவற்ற குழுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளை வீதியில் அடித்துக் கொல்லும் யுகத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு இந்நாட்டு மக்கள் நன்றி காட்டுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...