tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

தொடரும் தனியார் வாகன இறக்குமதி தடை

Share

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கை அரசாங்கம் தனியார் மோட்டார் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கம் பொருளாதார விவேகத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ள நிலையில், நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாட்டின் கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு, உறுதியான ஆரோக்கிய நிலையை அடையும் போது மட்டுமே வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...