24 663700d1d5c4d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

Share

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக, வாகனங்கள் உட்பட சுமார் 2000 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.

அதற்கமைய, வாகன இறக்குமதி தடை நீங்கினால் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சுமார் 750 மில்லியன் டொலர்களை வரியாக ஈட்ட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட போதும், ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

வாகன இறக்குமதியாளர்களின் தகவலுக்கமைய, தற்போது மிகவும் மதிப்புமிக்க வாகனம் மின்சார வாகனம் ஆகும். அதில் ஒன்று குறைந்தது 2 கோடி ரூபாயாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...