17 29
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகளும் இன்றைய நிலவரப்படி வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 – 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனைய அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் தற்போது 500 – 800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600 – 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும், ஆனால், அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப மரக்கறிகளின் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் என்று மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...