17 29
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகளும் இன்றைய நிலவரப்படி வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 – 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனைய அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் தற்போது 500 – 800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600 – 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும், ஆனால், அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப மரக்கறிகளின் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் என்று மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...