24 66177e1d19615
இலங்கைசெய்திகள்

வட பகுதியில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

Share

வட பகுதியில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

கிளிநொச்சியில் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வியாபாரிகள் 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மரக்கறி விலை வீழ்ச்சி குறித்து மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய் வரையிலும், பயிற்றங்காய் 100 ரூபாய் வரையிலும், பூசணி 100 ரூபாய் வரையிலும், ஏனைய மரக்கறி வகைகள் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தோட்ட செய்கையாளர்களிடமிருந்து வியாபாரிகள், 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே மரக்கறிகளை கொள்வனவு செய்வதன் காரணமாக தோட்ட செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, விவசாய பொருட்களின் விலை, வறட்சி உள்ளிட்ட சவால்களிற்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...