tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

Share

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 5 கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா பொதியொன்றின் விலை 1800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 96 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 90 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 170 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் போஞ்சி 800 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 350 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கோவா மற்றும் பீரட்ரூட் ஆகியன 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகற்காய், புடலங்காய் போன்றன ஒரு கிலோ 350 முதல் 400 ரூபாவிற்கும் வட்டக்காய் ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் இந்த மரக்கறி வகைகளின் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்...

Untitled 43
உலகம்செய்திகள்

சர்வதேச எரிபொருள் நெருக்கடி: பிரிட்டனில் வரலாறு காணாத விலை உயர்வு!

ஐக்கிய ராச்சியத்தில் டீசல் விலை 2022 டிசம்பருக்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில்...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிராமப்புற வலுவூட்டலுக்கான ‘பிரஜசக்தி’ திட்டம்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆய்வு!

சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், சமூகத்தில் பொருளாதாரப் பலன்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு...