tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

Share

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 5 கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா பொதியொன்றின் விலை 1800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 96 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 90 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 170 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் போஞ்சி 800 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 350 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கோவா மற்றும் பீரட்ரூட் ஆகியன 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகற்காய், புடலங்காய் போன்றன ஒரு கிலோ 350 முதல் 400 ரூபாவிற்கும் வட்டக்காய் ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் இந்த மரக்கறி வகைகளின் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...