24 66a051459b531
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரக்கறி சந்தை நிலவரம்: 1,000 ரூபாயைக் கடந்தது கறிமிளகாய்; தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு!

Share

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய் மற்றும் தக்காளியின் விலைகள் நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, தம்புத்தேகமவில் 980 முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தக்காளி, தம்புத்தேகமவில் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் பச்சை வீட்டுத் தக்காளி 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 170 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையிலும், நுவரெலியாவில் 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 260 ரூபாய் முதல் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில், 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்ட்டது.

அத்துடன் தம்புத்தேகமவில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 550 ரூபாய்க்கும், பாகற்காய் 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...