24 66a051459b531
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரக்கறி சந்தை நிலவரம்: 1,000 ரூபாயைக் கடந்தது கறிமிளகாய்; தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு!

Share

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய் மற்றும் தக்காளியின் விலைகள் நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, தம்புத்தேகமவில் 980 முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தக்காளி, தம்புத்தேகமவில் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் பச்சை வீட்டுத் தக்காளி 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 170 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையிலும், நுவரெலியாவில் 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 260 ரூபாய் முதல் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில், 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்ட்டது.

அத்துடன் தம்புத்தேகமவில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 550 ரூபாய்க்கும், பாகற்காய் 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
05 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜா-எல துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரின் வீடு இலக்கு!

ஜா-எல, புனித ஆன்ஸ் (St. Anne’s Road) வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது உந்துருளியில் வந்த...

04 6
செய்திகள்உலகம்

லியோனல் மெஸ்ஸி மீதான சமூக ஊடக விமர்சனம்: டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்....

03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...