24 66553b271b7d8
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

Share

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் மொத்த விலை உயராத நிலையில், சில்லரை விற்பனையில் விலை அதிகரித்துள்ளது.

முருங்கை ரூ.720, கரட் ரூ.240, மீன் மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, வெண்டைக்காய் ரூ.240, படோலா ரூ.320, பாக்கு ரூ.480, பூசணி ரூ.160, வெண்டைக்காய் ரூ.400க்கும், முள்ளங்கி ரூ.400க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ.200க்கும், நாட்டு உருளைக்கிழங்கு ரூ.360க்கும், தேசிக்காய் ரூ.1800க்கும், அத்திப்பழம் ரூ.2500க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

போஞ்சி ரூ.550-600, முருங்கை ரூ.200-220, கரட் ரூ.120-130, மீன் மிளகாய் ரூ.200-220, பீட்ரூட் ரூ.250-350, தக்காளி ரூ.60-80, வெண்டைக்காய் ரூ. 100-120, படோலா ரூ.120-130, பாக்கு ரூ.280-300, பூசணி ரூ.70-80, கத்தரிக்காய் ரூ.180-200, முட்டைகோஸ் ரூ.80-90, வெண்டைக்காய் ரூ.250-270, மரவள்ளிக்கிழங்கு ரூ.60-70, உள்ளூர் உருளைக்கிழங்கு ரூ.140-300க்கும் விற்பனையாகின்றது.

இந்த நாட்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 70 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பச்சை இஞ்சியின் மொத்த விலை 2100 முதல் 2300 ரூபா வரையிலும்,தேசிக்காய் கிலோ ஒன்றின் மொத்த விலை 1000 முதல் 1100 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...