tamilni 319 scaled
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

Share

வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.

அண்மைய நாட்களில் 2,000 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட கரட் ஒரு கிலோகிராம் தற்போது சந்தையில் 700 ரூபாய் முதல் 800 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் கரட் ஒரு கிலோகிராம் ஒன்றின் சில்லறை விலை இன்றைய தினம் 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையில் பதிவாகியிருந்தது.

அத்துடன், போஞ்சி ஒரு கிலோகிராம், 650 ரூபாவுக்கும், கோவா கிலோகிராம் ஒன்று 500 ரூபாவுக்கும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் தக்காளி 450 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 850 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 350 ரூபா முதல் 450 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மெனிங் சந்தை, கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலையம், புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையம், தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, நுவரெலியா, உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...