tamilni 237 scaled
இலங்கைசெய்திகள்

இந்துக்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கமே வெடுக்குநாறி மலை விவகாரம்

Share

இந்துக்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கமே வெடுக்குநாறி மலை விவகாரம்

இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (12.03.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”மக்களின் பாதுகாவலர்களாக நிற்க வேண்டிய பொலிஸாரே மக்களையும் , அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் மிக கொடூரமாக நடந்து கொண்டது எமக்கு அதிர்ச்சியையும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

இதே போன்ற செயற்பாடுகள் பரவலாக எமது வணக்க தலங்களில் இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடந்து வருவதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க மாட்டாேம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வன்னி மாவட்ட புத்திஜீவிகள் ஏன் இதற்கான ஒரு எதிர்வினையை , நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

மதங்களை, சட்டங்களை தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒரு தடவை வரும் சிவராத்திரி தினத்தை மக்கள் நினைவுகோருவதையும், அதனை கொண்டாடுவதையும் தடுக்கும் முகமாக பரவலாக சிவதலங்களில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு இதன் பின்னணியில் புத்த பிக்குகள் இருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.

மேலும், பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கூட மதிப்பளிக்காது பௌத்த பிக்குகளின் உத்தரவுகளுக்கே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையை தூண்ட முயற்சிப்பது போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 144
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கதிர்காம தேவாலயத்தின் இரு பிரதான பூசைகள் ரத்து: நாளை இரவு சித்திரைத் திருவிழா ஊர்வலம் ஆரம்பம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலத்தைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு...

world 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பரபரப்பு: கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (ஏப்ரல் 13) சிசு ஒன்றின் சடலம்...

world 142
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாகப் பிரகடனம்: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நீதிக்காகவும் எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப்...

world 141
செய்திகள்இலங்கை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை: ஏப்ரல் 21 முதல் ஆரம்பம்!

2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (National Colleges...