வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி
இலங்கைசெய்திகள்

வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி

Share

வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, ​​அவர்கள் தேடி வந்த நபர் விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்து திரும்பியதால் ஆத்திரமடைந்த கும்பல் இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து வந்த கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த 21 வயதான பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்தமையினால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்படும் என நினைத்து அவரை கத்தியால் குத்தி பின்னர் தீ வைத்துள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒருவரின் பெயர் சொல்லி அந்த நபர் குறித்த வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது வீட்டில் இருந்த அனைவரும் தீக்காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சம்பவம் எப்படி நடந்தது என்பது பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. எனவே தாக்குதலுக்கு வந்த கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கும்பலால் பெயர் கூறி தேடப்பட்ட நபர் வவுனியாவில் உள்ள பிரபல குண்டர் எனவும் பலரிடம் கப்பம் கேட்டு பணம் கொடுக்காததால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் வர்த்தகரான சுரேஷ் என்பவரின் வீட்டின் மீதே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இங்கு அந்த வீட்டில் விருந்துக்கு வந்திருந்த சுரேஷின் உறவினரான 21 வயது பாத்திமா சசீமா சைதி உயிரிழந்துடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பத்து பேரில் நான்கு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய 5 பேர் கைது! – கடமையில் தவறிய மத்தல பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த...

image 1200x800 15 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் உரை – இங்கிலாந்தில் கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட்...

image 1200x800 16 3
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிற்கு CID அழைப்பு! – சமன் ஏக்கநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு...

image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...