tamilni 330 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பேருந்தில் பெண்ணிடம் 20 பவுண் நகை கொள்ளை

Share

வவுனியாவில் பேருந்தில் பெண்ணிடம் 20 பவுண் நகை கொள்ளை

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் 26.09.2023 கைதுசெய்துள்ளனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமே இத்திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரிடம் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்படு அளிக்கப்பட்டள்ளது.

இதன் போது வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக தலைமையில் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் உள்ளடங்களைக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...