tamilni 239 scaled
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள வற் வரி!

Share

மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள வற் வரி!

18 வீதத்தால் புதிய பெறுமதி சேர் வரியை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வரியானது, கட்டண உயர்வு விடயத்தில் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், கடந்த 25 வருடங்களில் தரமான தனியார் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படவில்லை.ஆனால் சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது.

டொலர் பெறுமதி உயர்வால், 5.5 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபாய் வரை இருந்த நிலையான பேருந்தின் விலை, தற்போது 13.7 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தனியார் துறையிடம் முன்னர் 20,000 பேருந்துகள் இருந்தன, இப்போது அவை 17,000 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் பேருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது.

வரி காரணமாக, பேருந்து ஒன்றின் விலை 15.7 மில்லியனாக அதிகரிக்கும். இந்த விலை உயர்வால், பேருந்து உரிமையாளர்களுக்கு பேருந்துகளை இறக்குமதி செய்யும் திறன் இல்லாமல் போகும்.

வற் வரிக்கு இணையாக, உதிரி பாகங்கள், உராய்வு எண்ணெய் மற்றும் சேவைகளின் விலையும் உயரும் எனவே கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டியேற்படும்.

இந்த புதிய வற் வரியில் எரிபொருள் விலையும் சேர்க்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலையும் அதிகரிக்கும்.

இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டால், பேருந்து கட்டணத்தில் உறுதியான அதிகரிப்பு இருக்கும்,இது சாதாரண போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களை நேரடியாக பாதிக்கும்.

எனினும் இந்த அனைத்து அதிகரிப்புகளுடனும், இந்த சேவையை தொடர முடியாது, இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதல் தனியார் பேருந்து சேவையில் புதிய வற் வரிமுறை திட்டவட்டமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...