tamilni 298 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வற் வரி : கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல்

Share

அதிகரிக்கும் வற் வரி : கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல்

ஜனவரி மாதத்தில் வற் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் அது, மக்களுக்கான மின் கட்டணம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வங்கியுடனான இணக்கப்பாட்டுக்கு இணங்க அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வற் வரியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் அது தற்காலிக வேலைத் திட்டமாகவே முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரியில் அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் வரி வலையமைப்பில் விரிவான முறைப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், அதன் மூலமாக நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...