tamilnif 4 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி

Share

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி

இலங்கையில் இதுவரையில் வற் வரிக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளை அதன் கீழ் கொண்டுவரும் புதிய வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் செய்யப்படவுள்ளது.

இன்று நிறைவேற்றப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கமைய, பெட்ரோல், தொலைபேசி, கணினி, இறக்குமதி செய்யப்படும் பானங்கள், பாண்தூள்கள், குழந்தை பால் உணவுகள் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

புதிய வற் வரிக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் இறுதிச் சடங்குகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தகனம் மற்றும் புதைகுழிகள் மீதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், மருந்துப் பொருட்கள், மருந்துகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், அனைத்து சுகாதார சேவைகள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், மீன்பிடி தொடர்பான அனைத்து உபகரணங்கள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பால், ஆடை தொழில், மின் கட்டணம், கல்விச் சேவைகள், பேருந்து, ரயில் கட்டணம் உள்ளிட்ட பொருள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களும் உயரும்.

புதிய சட்டத்தின் முதன்மை நோக்கம், அனைத்து நிதிச் சேவைகள், அனைத்து மொத்த மற்றும் சில்லறை வணிகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் என்பன வற் வரிக்கு உட்பட்டது அல்ல.

விலை மனுக்கோல் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள் உட்பட, 18 சதவீத வற் வரியை விதிக்க வேண்டும்.

இந்த சட்டமூலத்தை இன்று விவாதித்து திருத்தம் செய்த பின்னர், எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வற் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 10,624 ஆகும். அரசாங்கத்தின் வருடாந்த வரி வருவாயில் 21.4% வற் வரி செலுத்துவதன் மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...